கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த போது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக விசாரணையைக் கையிலெடுத்தது சிபிசிஐடி. ஆனால், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மேலும் ஒருவர் படுகொலை..!


சிபிசிஐடி விசாரணையில் கொலையாளிகள் யாரும் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மதுரைக்கிளை சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. நாட்கள் சென்றதே தவிர, கொலையாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. சிபிஐ விசாரணையில்  எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என்று  ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், சிபிசிஐடி மற்றும் சிபிஐ அமைப்புகள் ஆகியவை கடந்த 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தார். இதனால், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் அரியலூர் டி.எஸ்.பி.மதன், சென்னையைச் சேர்ந்த சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை தீவிரமாக தற்போது விசாரித்து வருகிறது. இந்தக் குழு, தங்களது விசாரணையின் நிலையை 15 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்திற்கு வந்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதனை சிபிசிஐடி டிஜிபி  ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


மேலும் படிக்க | ஆசை இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையோடு எரித்து கொன்ற கொடூரன்..!


அதன்படி, சிறப்பு புலனாய்வுக்குழு தங்களது விசாரணை குறித்த ரகசிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை குறித்த ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசியதாவது, ‘சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் புதிய துப்புக் கிடைத்துள்ளது. சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த ஆறு போலீசார் உட்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளது. உயர் அதிகாரிகளையும் தீவிரமாக விசாரிக்க உள்ளோம். இதுமட்டுமல்லாமல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்காக, 43 அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம். கொலையாளிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளோம்’ என்று தெரிவித்தார்.


காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை திருப்தி அளிப்பதாக தெரிவித்த  நீதிபதி பாரதிதாசன், விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 


மேலும் படிக்க | மனைவியுடன் தகாத உறவு.. நண்பனை வெட்டிப் புதைத்த கொடூரம்..!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR