புதிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் விஜயா தஹில் ரமாணி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த தஹில் ரமணி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தஹில்ரமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


கடந்த 1990 ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநில அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட தஹில்ரமணி, 2001 ஆம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.