கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய வீட்டிற்கு முன்புறம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குளிர்பான பாட்டில் ஒன்று கிடந்ததாக கூறப்படுகிறது. அதை சத்யராஜின் தாய் லட்சுமி, மகள் ரக்ஷனா ஆகியோர் கையில் எடுத்து குடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால், உடல்நலக்குறைவு ஏற்பட்ட குழந்தை ரக்ஷனா மற்றும் குழந்தையின் பாட்டி லட்சுமி ஆகியோர், சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிறுமியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக  ரகஷனா சேலம் அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது, போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 


மேலும் படிக்க | எங்களை பார்த்தாலே முகம் சுளிக்கிறார்கள்..!


அதேபோல, சத்யராஜின் தாய் லட்சுமியும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி லட்சுமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், காலாவதியான குளிர்பானத்தை குடித்ததால் அவர்கள் உயிரிழந்தார்களா அல்லது வேறு யாரேனும் குளிர்பானத்தில் விஷம் மருந்து கலந்து சென்று வீசினார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | அரசு பள்ளி மாணவர்க்ளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு : தீர்ப்பு ஒத்திவைப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR