சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்றது. பொதுக்குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்யப்பட்டு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுக்குழுவுக்கு முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் நிலவியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த மோதலின் போது, பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது. பின்னர், ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகம் உள்ளே நுழைந்தனர். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஈபிஎஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டன. அதன் பின்னர், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடும் பதட்டம் நிலவியது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | AIADMK General Council Meet: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு


அதிமுக தலைமை கழகம் சார்பில் ஓபிஎஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. புகாரை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அலுவலகத்தை சுற்றியுள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ஈபிஎஸ் அதிரடி! அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR