நடிகர் கமல் அவர்களின் புதிய கட்சி அறிவிப்பு பிறகு, தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று நெல்லை மாவட்ட ரஜினி மன்ற ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது...


"வரும் ஏப்ரல் 27 அன்று வெளியாகவுள்ள காலா திரைப்படம் ஆனது நெல்லை மாவட்ட கதைதான், நெல்லை மக்கள் மற்றவர்களுக்கு அரசியல் கற்று தருபவர்கள்.


ஒரு குடும்பத்திற்கு தலைவன் சரியாக இருக்க வேண்டும்; நம் குடும்பத்தை பொருத்தவரை நான் சரியாக இருக்கின்றேன். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை பார்ப்போம்.


அரசியலில் கட்டமைப்புதான் முக்கியம். அதன் அடித்தளத்தை வலிமையுடன் அமைக்க வேண்டும் எனபதால் தான் நாம் இவ்வாறு செயல்படுகிறோம்."


என தெரிவித்துள்ளார்...