தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையின் அடாவடி நடவடிக்கையை தடுத்திட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாகையில் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்த, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்துள்ளார். கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்களின் பைபர் படகை இலங்கை கடற்படை கடந்த பத்தாம் தேதி கப்பல் கொண்டு மோதி கடலில் படகை கவிழ்த்தனர். இந்த சம்பவத்தில் மீனவர்களின் பைபர் படகும் அதில் சென்ற மீனவர்களும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட செருதூர் மீனவர்களை இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்


பின்னர் உடைந்த படையின் உரிமையாளரான மீனவர் தர்மனுக்கு படகை சரி செய்துகொள்ள நிவாரண உதவி தொகையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையின் அடாவடி நடவடிக்கையை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றி கழகம் சார்பில் வலியுறுத்துவதாக அவர் கூறினார். மேலும் இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மீனவ சமுதாய மக்களுக்கு இரு அரசுகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தளபதி அறிவுறுத்தலின் படியும் தமிழக வெற்றி கழகம் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ராமேஸ்வரம் மீனவர்களை மொட்டை அடித்து அசிங்கப்படுத்திய சம்பவம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இது வன்மையாக கண்டிக்கத்தக்க விஷயம் இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் கண்டிப்பாக அதற்கு உண்டான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக வெற்றி கழகம் சார்பாக மீனவர்கள் விவகாரம் குறித்து மாநாட்டில் ஏதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மாநாட்டில் மீனவர்கள் குறித்தான தீர்மானங்களை தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் அவர் கூறினார்.


மேலும் படிக்க | திருமாவளவன் பின்வாங்காமல் இருக்க வேண்டும் - சீமான் பேட்டி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ