தெலங்கானா மாநிலம் குண்டக்கட்டு மலைப்பாதையில் சென்ற அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் 40 பேர் உயிரிழப்பு எனத் தகவல். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலங்கானா மாநிலம் குண்டக்கட்டு மலைப்பாதையில் இன்று காலை சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீர் என கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 


இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்ப்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தற்போது வரை மீட்ப்புபடையினர் சுமார் 42 உடல்களை மீட்டுள்ளனர். மேலும், இவ்விபத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.



இந்த விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....!