சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுசீந்திரகுமார் என்ற ரவுடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகளில் தண்டனை பெற்றவர். 


3 நாள்களுக்கு முன்பு அந்த ரவுடி தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அதில் கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் கருணாகரன் கலந்து கொண்டு அந்த ரவுடிக்கு கேக் ஊட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் அப்லோட் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரித்த சேலம் மாநகர காவல் ஆணையர் கருணாகரனை இடமாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.