அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK) முன்னாள் தலைவர் வி.கே.சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாகவும், ஆக்ஸிஜன் உதவி இன்றி சுவாசிப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் (BMCRI) தெரிவித்துள்ளது. 


சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு (Sasikala) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் (Victoria Govt Hospital) அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே 4 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம்., சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


ALSO READ | சென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை திறப்பு..!


இது குறித்து விக்டோரியா மருத்துவமனை (Victoria Hospital) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. அவர் நான்காவது நாளாக ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியின்றி இயல்பாக சுவாசித்து வருகிறார். சசிகலாவின் உடலில் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை இயல்பான அளவிலே உள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR