தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது.,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் (TN Weather updates) கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.


ALSO READ | தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்


கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி, வேலூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு (TN School) மட்டும் விடுமுறை அறிவிப்பட்டுள்ளது. 


இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி வரை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில்  தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


அத்துடன் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ALSO READ | அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR