Senthil Balaji Minister Without Portfolio: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் அதிகாலை கைது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவருக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதய ரத்தகுழாய்களில் மூன்று அடைப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் நேற்றிரவு மாற்றப்பட்டார். ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு 10 நிமிடங்களில் கொண்டுசெல்லப்பட்டார். 


பரிந்துரையை ஏற்ற ஆளுநர்... ஆனால்!


இதை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காவான மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர்கள் தங்கம் தென்னரசுக்கும், முத்துசாமிக்கும் மாற்ற தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. மேலும், செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் தொடர பரிந்துரைக்கப்பட்டது.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி... காவலில் எடுக்க உத்தரவு - நீதிபதி அதிரடி!


இந்த பரிந்துரைக்கான காரணங்களை Misleading and Incorrect என தெரிவித்த ஆளுநர் ஆர்.என். ரவி, இலாக்கா மாற்ற பரிந்துரையை ஏற்க மறுத்தார். இதற்கு உடனடியாக நேற்றே தமிழ்நாடு அரசு பதில் கடிதம் அனுப்பினாலும், இன்று மாலை தான் இலாக்கா மாற்ற பரிந்துரையை ஆளுநர் ஏற்றதாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 


முதலமைச்சரின் அதிகாரம்


இருப்பினும், இலாக்கா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர தமிழ்நாடு அரசு செய்த பரிந்துரையை ஏற்க மறுப்பதாகவும், குற்ற நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள நபரை அமைச்சரவையில் தொடர செய்வதை ஏற்க முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. 


இதனால், முதலமைச்சரின் அதிகாரத்தை பயன்படுத்தி, இதற்கு நிர்வாக ரீதியிலான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், செந்தில் பாலாஜியின் இலாக்காவை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றியதையும், இலாக்கா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கும் தமிழ்நாடு அரசு அரசணையை பிறப்பித்தது.


அரசாணை வெளியீடு


தமிழ்நாடு அரசு இன்றிரவு வெளியிட்டுள்ள அரசாணையில்,"அமைச்சர்‌ வி.செந்தில்‌ பாலாஜி‌ பொறுப்பில்‌ இருந்த மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை ஆகியவை அவரது உடல்‌ நிலையின்‌ காரணமாக, நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசுக்கு மின்சாரத்‌ துறையும்‌, வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புர வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌
துறையையும்‌ பிரித்து வழங்கி இன்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வி.செந்தில்‌ பாலாஜி இலாகா இல்லாத (Minister without portfolio) அமைச்சராகத்‌ தொடரவும்‌ ஆணையிடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது. 


மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ