தமிழகத்தில் (Tamil Nadu) 7 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில்  (Tamil Nadu) அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, சேலம்,  தர்மபுரி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


ALSO READ:TN Weather: இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்-IMD 


தென்மேற்கு, மத்திய மேற்கு வடக்கு அரபிக்கடல் பகுதியில், 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சென்னையை (Chennai) பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ: TN Weather: அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR