கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை பணிக்கு ₹100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்

கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் வந்தாலும், மூன்றாவது அலை பரவல் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 29, 2021, 03:07 PM IST
  • RT-PCR கிட்-களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
  • திரவ ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காக, 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
  • கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை பணிக்கு ₹100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் title=

 

கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் வந்தாலும், மூன்றாவது அலை பரவல் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, ₹100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) உத்தரவிட்டுள்ளார். திரவ மருத்துவ ஆக்சிஜன் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்குதல், பரிசோதனை நடவடிக்கைகள் உள்ளிட்ட தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, தமிழக அரசு (TN Government)  இன்று (ஜூன் 29) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடும் வகையில் நிதி வழங்க வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் வேண்டுகோள்  வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இன்று வரை 353 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

ALSO READ | COVID-19 Update: தமிழகத்தில் 5,000-க்கு கீழ் சென்றது ஒரு நாள் தொற்று பாதிப்பு!!

இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, முதல் கட்டமாக, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 
இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக RT-PCR பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான RT-PCR கிட்-களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்க  தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் 41.40 கோடி ரூபாயும், கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில், கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

ALSO READ: மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News