TN Weather: இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்-IMD

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், அவற்றுடன் ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 24, 2021, 05:44 PM IST
  • தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.
  • தமிழகத்தில் தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.
  • சென்னையைப் பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
TN Weather: இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்-IMD title=

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், மக்கள் பெரும்பாலான இடங்களில் இதமான வானிலையை அனுபவித்து வருகின்றனர். 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தின் (Tamil Nadu) கடலோர மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகின்றது. இன்று வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், அவற்றுடன் ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: TN Weather: அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையக் கூறியுள்ளது. 

சென்னையைப் (Chennai) பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று பரவலான மழை பெய்தது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 10 சென்டி மீட்டர் , மழை பெய்தது. சோளிங்கர், திருவாலங்காடு ஆகிய இடங்களில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மீன்வர்களுக்கு எச்சரிக்கை

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோர தென் கிழக்கு பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என கணிகப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பாட்டுள்ளார்கள். 

நிலத்தடி நீர் அதிகரித்தது

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக பரவலான மழை (Tamil Nadu Rain) பெய்து வருகிறது. ஆகையால், இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் நல்ல முறையில் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். 

ALSO READ: 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News