பொள்ளாச்சி : சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.ஒரு சில வக்கிர மனம் கொண்ட நபர்கள் தங்களின் பாலியல் ஆசைக்காக எந்தவொரு விவரமும் இல்லாத சின்னஞ் சிறிய சிறுமிகளை கூட வன்புணர்வு செய்து விடுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படிவொரு சம்பவம் தான் பொள்ளாச்சி (Pollachi) அருகே அரங்கேறியுள்ளது.கோவை (Coimbatore) மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் வசித்து வரும் சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு (Sexually Abused) செய்துள்ளார்.


ALSO READ | சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்!


பாலியல் வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட 16வயது ஆன சிறுமி தனது பெற்றோருடன் ஆனைமலையில் உள்ள தோட்டத்தில் வசித்து வருகிறார்.இந்த சிறுமிக்கு முகநூல் (Facebook)மூலமாக பிரவீன்குமார் (24) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் முகநூலில் பழகி வந்த அந்த நபர் ஆகஸ்ட் 23ஆம் தேதி அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.


இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில்(Poilce Station) புகார் அளித்துள்ளார்.அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆனைமலை நெல்லுக்குத்து பாறை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற அந்நபரை சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக போக்சோ (Poksho) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


பின்பு கோவையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை சிறைச்சாலையில் அடைத்தனர்.!


ALSO READ | Shocking incident: #MeToo: ரஜினியின் 2.0 நடிகை மீது பாலியல் புகார் கூறிய பிரபல மாடல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR