வரும் மே 22-ஆம் நாள் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது...



"சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22-ஆம் நாள் இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (எண்: 06043), மறுநாள் காலை 6.45 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். இது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழித்தடத்தில் செல்லும். மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 20-ஆம் நாள் காலை 8 மணிக்கு துவங்கும்" என குறிப்பிட்டுள்ளது!