உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில், சென்னை மெரினாவில் "நமோ மீன் கண்காட்சி" நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நவம்பர் 21., உலக மீனவர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 



உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக மீனவர் பிரிவு சார்பில் சென்னை மெரினாவில் "நமோ மீன் கண்காட்சி" மற்றும் "மீன் உணவு திருவிழா" நடைபெற்றது. மாநில தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 



இந்நிகழ்ச்சிக்கு பின் அங்குள்ள குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளும் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது!