சென்னை: மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் போடும் நடைமுறை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடங்கியது. டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்திடம் இருந்து அப்பல்லோ மருத்துவமனை நேரடியாக தடுப்பூசியை வாங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யாவின் கண்டுபிடிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் தற்போது தான் அறிமுகமாகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கும் மூன்று வார இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும்.


இந்த தடுப்பூசி, ஹைதாராபாதில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகத்தில் (Dr. Reddy's Laboratories) உற்பத்தி செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் அங்கிருந்து நேரடியாக வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.  


Also Read | Third wave: 3வது அலை குழந்தைகளை பாதிக்குமா?


உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரஷ்ய தடுப்பூசிகள் (vaccines) போதுமான அளவு கையிருப்பு உள்ளது. தற்போதுதான் அதன் பயன்பாடு பரவலாக்கப்படுகிறது.


இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியின் செயல்திறன் 91 சதவிகிதம் ஆகும். தமிழகத்திலேயே முதன்முதலில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தான் ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசி போடப்படுகிறது.


தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் தடுப்பூசி போட 1,145 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.


Read Also | Effect of Third Wave: மூன்றாவது அலை; குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR