சென்னை: இந்தியாவையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாவது அலையின் சீற்றம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு,  ஊரடங்கு மற்றும் பல வித  தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று தமிழ்நாட்டில் (Tamil Nadu) 1,652 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,99,225 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 183 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 23 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் (Tamil Nadu) தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,686 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 19,391 ஆக உள்ளது.


ALSO READ: COVID-19 Update: இன்று தமிழகத்தில் 1,652 பேர் பாதிப்பு, 23 பேர் உயிர் இழப்பு


கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 19 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,686 -ஐ எட்டியுள்ளது. 


தமிழகத்தில் இன்று 1,859 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,45,178 ஆக உயர்ந்துள்ளது. 


தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு (Coronavirus) பட்டியலில் இன்றும் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 205 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 183 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அதிக பாதிப்பு பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருக்கும் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 152 ஆக உள்ளது. நான்காம் இடத்தில் செங்கல்பட்டும் ஐந்தாம் இடத்தில் தஞ்சாவூர் மாவட்டமும் இடம் பிடித்துள்ளன. 


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:


கோவை - 205
சென்னை - 183
ஈரோடு - 152
செங்கல்பட்டு - 99
தஞ்சாவூர் - 95


இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 16
செங்கல்பட்டு 99
சென்னை 183
கோவை 205
கடலூர் 57
தர்மபுரி 21
திண்டுக்கல் 8
ஈரோடு 152
கள்ளக்குறிச்சி 24
காஞ்சிபுரம் 31
கன்னியாகுமரி 25
கரூர் 13
கிருஷ்ணகிரி 20
மதுரை 14
மயிலாடுதுறை 14
நாகப்பட்டினம் 48
நாமக்கல் 50
நீலகிரி 36
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 25
ராமநாதபுரம் 3
ராணிப்பேட்டை 20
சேலம் 79
சிவகங்கை 21
தென்காசி 8
தஞ்சாவூர் 95
தேனி 5
திருப்பத்தூர் 15
திருவள்ளூர் 58
திருவண்ணாமலை 31
திருவாரூர் 39
தூத்துக்குடி 13
திருநெல்வேலி 15
திருப்பூர் 76
திருச்சி 52
வேலூர் 27
விழுப்புரம் 43
விருதுநகர் 6


ALSO READ: WHO: இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR