கனமழையை காரணத்தால் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  


மேலும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இன்று  மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், பனிக்காற்று மறைந்து தூறல் போட ஆரம்பித்தது.


இந்நிலையில், தற்போது கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கெனவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை உள்ள நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.