தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டமானது குடியரசு தினமாகன் ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, உலக நீர் தினமான மார்ச் 22, உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆகிய நாள்களில் நடக்கும். அந்தவகையில் தற்போது, நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில்  தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் பொது மக்கள் பங்கேற்கும் கிராம சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் கிராம சபை கூட்டங்களைபோல, தமிழ்நாட்டில் முதல்முறையாக நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை பல்லாவரம் அருகே பம்மல் 6ஆவது வார்டில் நவம்பர் 1ஆம் தேதி மாநகர சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்கிறார்.


மேலும் படிக்க | மக்களே அலர்ட்! சென்னையில் மழை: வானிலை மையம் முக்கிய தகவல்`


அதேபோல ஒவ்வொரு வார்டுக்கும் 9 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வார்டு கவுன்சிலர் தலைவராக இருந்து வருகிறார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வார்டிலும் குறைகேட்பு கூட்டத்தில் குறை கேட்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் மாநகரசபை கூட்டத்தில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வார்டு குறை நிறைகளை கேட்டு அறியவுள்ளார் நென கூறப்படுகிறது.


மேலும் படிக்க | கேரளாவில் பறவைக் காய்ச்சல்: நிலைமையை கண்காணிக்க விரைந்தது மத்திய குழு


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ.க. அஞ்சாது: வானதி சீனிவாசன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ