வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக மொத்த மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்வெட்டால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக, மொத்தமாக 1,830 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மொத்த உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.