ஒசூர் அருகேயுள்ள உரிகம் பகுதியை சேர்ந்த சிவமாதனின் 21 வயதான மகன் சிவா. இவருக்கும் தேன்கனிக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த சின்னராஜ் என்பவரது 18 வயதான மகள் அபிநயாவிற்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் உரிகம் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்க அபிநயா அங்கு சென்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து அபிநயாவும், சிவாவும் வன அலுவலக்ததின் பின்புறம் உள்ள சேக் டேமை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அதை பார்த்த அபிநயா அங்கிருந்த குட்டையில் இறங்கி குளிக்க ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து குட்டையில் குளிப்பதற்காக இறங்கிய அபிநயா நீரில் மூழ்கியுள்ளார். அவரின் அலரல் சத்தத்தை கேட்ட சிவா, அபிநயாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் குட்டையில் குதித்துள்ளார்.


ஆனால் இருவராலும் குட்டையில் இருந்து தப்பி வெளியேற முடியாமல் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முற்படுவதற்குள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி, பரிதாபமாக குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; அசத்திய சென்னை போலீஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR