பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 110-வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதலைமைச்சர், துணை முதலைமைச்சர் அஞ்சலி செலுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. இன்று காலை மதுரை வந்த முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.


அதேபோல தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின்  முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.