சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வந்த நிலையில், பரவலாக நாடு முழுவதும் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை சிறிது குறைந்து வருகிறது. எனினும், தொற்று முழுவதுமாக ஒழியும் வரை இதை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றுக்கு (Coronavirus) எதிரான மிகப் பெரிய அயுதம் தடுப்பூசிதான் என்பதால், தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடந்துண்டு இருக்கிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்துகொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே இருந்த தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக அரசும் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், தடுப்பூசி (Vaccine) பற்றாக்குறை காரணமாக, ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார். 


ALSO READ: கவச உடையில் நலன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்த கோவை நோயாளிகள்


இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த மாதம் தமிழகத்துக்கு இரண்டு மடங்குக்கும் மேலாக தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அவற்றில் 1.74 லட்சம் இன்னும் வரவேண்டியுள்ளது. நம்மிடம் தற்போது தடுப்பூசி இருப்பு குறைவாகவே உள்ளது. ஜூன் மாதம், 42.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதாகவும் அரசு உறுதியளித்துள்ளது. ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ், ஜூன் 6-ம் தேதிதான் வரும். அதனால், ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் வரும் வரை தடுப்பூசி பணிகள் நிறுத்தப்படுகின்றன. ஜூன் 3 முதல் தடுப்பூசி பணிகள் நிறுத்தப்படும். மூன்று நாட்களுக்கு இது தொடரும். தற்போது கையில் உள்ள தடுப்பூசிகளை, ஆட்சியர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார். 


இதற்கிடையில் தடுப்பூசி விநியோகம் குறித்து மத்திய அரசு நேற்று காலை விவரங்களை வெளியிட்டது. அதன் படி, இதுவரை 23 கோடி தடுப்பூசிகள் விநியோகப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 1.75 கோடி தடுப்பூசிகள் மீதமிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.  இது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும், அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இது சாத்தியப்படும் என்றும் மத்திய அரசு குறிப்பிடுள்ளது. 


நேற்று தமிழகத்தில் (Tamil Nadu), 27,936 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தமாக பாதிக்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,39,716 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தமிழகத்தில் தொற்று பாதிப்பால் 478 பேர் உயிர் இழந்தனர். சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,01,781 ஆக உள்ளது.  


ALSO READ: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,936 பேர் பாதிப்பு, 478 பேர் உயிர் இழப்பு!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR