சென்னை: வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல்  சென்னை அருகே வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று காலை சென்னைக்கு கிழக்கு மற்றும்  வடகிழக்கே 440 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 370 கிமீ தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடக்கு தமிழ்நாடு-தெற்கு ஆந்திரா இடையே சென்னை அருகே நாளை பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.