பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) தலைவர் வி.கே.சசிகலா COVID-ல் இருந்து மீண்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (BMCRI) தெரிவித்துள்ளது. 


இது குறித்து விக்டோரியா மருத்துவமனை (Victoria Hospital) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., “சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 98% லிருந்து 97% ஆக குறைந்துள்ளது. சசிகலா (Sasikala) சீராக உணவு உட்கொள்கிறார். உதவியுடன் நடக்கிறார். சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் சிகிச்சைக்கும் ஒத்துழைக்கிறார். ரத்தத்தில் சர்க்கரை அளவு 178 ஆக உள்ளதால் சசிகலாவை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | சசிகலா 27 ஆம் தேதி விடுதலையாவது உறுதி! 4 வருட சிறைத்தண்டனை முடிந்தது


முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் (Accumulation case) தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்த சசிகலா நாளை விடுதலையாகிறார். இந்நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஜனவரி 20 ஆம் தேதி சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா வரும் 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR