நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்துள்ளது. தேமுதிக கட்சி மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் இந்த கூட்டனி  தமிகழத்தில் தேர்தல் நடந்த முடிந்த 232 தொகுதிகளில் ஒரு தொகுதி கூட வெல்லவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலைமைச்சர் வேட்பாளராக ஊளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வியடைந்தார் மற்றும் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 


தேர்தல் முடிவுகள் பற்றி  விஜயகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:


எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்.


வாக்களித்த அனைத்து "தமிழக வாக்காள பெருமக்களுக்கும் நன்றி" தெரிவித்துள்ளார்.