காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு மண்டல மாநாடும் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த கரசங்காலில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பாராட்டு விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, விக்ரமன், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, நடிகைகள் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த விழாவிற்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். 


மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு இருந்த கட்சி கொடியை பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஏற்றிவைத்தார். மேலும் இவ்விழாவில் கலைத்துறையில், அரசியல் துறையில் விஜயகாந்த் கடந்து வந்த பாதையை விளக்கும் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.