தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் 23ஆம் தேதி நடத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கோரி மனு அளித்திருந்தார். அந்த மனுவில் மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு பெற்றுள்ளதாகவும், வாகனம் நிறுத்துவதற்காக சுமார் 70 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் குறிப்பிடப்பட்ட இடத்தில், காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மனுவில் குறிப்பிட்ட இடம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குரங்கம்மை பாதிப்பு... தமிழ்நாட்டில் இல்லை - பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர் மா.சு., விளக்கம்


விஜய் மாநாடுக்கு அனுமதி வழங்குவதில் உள்ள சிக்கல் என்ன?


மாநாடு நடக்கக்கூடிய பகுதி விக்கிரவாண்டி டோல்கேட் அருகே உள்ளதால் வார இறுதி நாட்களில் இங்கு சாதாரணமாகவே அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில் மாநாடும் அப்பகுதியில் ஒட்டி நடக்கும் பட்சத்தில் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாக இருபுறமும் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. முன்னதாக மறைந்த நடிகர் விஜயகாந்த் தனது கட்சியின் மாநாட்டை இதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே நடத்திய பொழுது பல மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டதை போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர். 


விஜய்க்கு இருக்கும் அடுத்த வாய்ப்புகள் என்ன?


ஒருவேளை இந்த இடத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்றால் நடிகர் விஜய் மாநாடுக்கான இடத்தை மாற்ற வேண்டியிருக்கும். புதிதாக ஒரு இடத்தை பார்த்து அந்த இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டை நடத்த காவல்துறை அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடி அந்த இடத்தை ஒதுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என முறையிடலாம். இந்த வாய்ப்பு ஒத்துவரவில்லை என்றால் புதிய இடத்தில் வேறொரு தேதியில் தான் விஜய்யின் அரசியல் மாநாடு நடத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. 


ஏற்கனவே திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் அரசியல் மாநாடுக்கு விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழகம் இடம் பார்த்தது. ஆனால் அங்கு யாரும் விஜய்யின் மாநாடுக்கு இடம் தர முன்வரவில்லை. அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாக திருச்சியில் இருந்து வேறு பகுதியில் அரசியல் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு விஜய் வந்தார். அதனடிப்படையிலேயே விழுப்புரம் மாவட்டத்தில் தன் கட்சி மாநாடுக்கு இடம் பார்த்த நிலையில் இப்போதும் அங்கும் சிக்கல் எழுந்துள்ளது.


மேலும் படிக்க | 'ஆபாச படங்கள்...' பெண் மருத்துவருக்கு பாலியல் சீண்டல்... பயிற்சி மருத்துவர் கைது - ஷாக் சம்பவம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ