தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிர்தரப்பால் போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற போது காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் விஷால் உள்ளிட்டோர் கைது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை திறக்க முயன்ற நடிகர் விஷால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாகியது. 


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு எதிரான உறுப்பினர் நேற்று அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து இன்று விஷால் திநகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். 


நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க வேண்டும் என்று அங்கு பாதுகாப்பு க்கு இருந்த போலீசாரிடம் முறையிட்டார். அப்போது சாவி எடுத்துவந்து திறக்கலாம் என்று போலீசார் கூறினார். ஆனால் திருட்டுத்தனமாக போடப்பட்ட பூட்டுக்கு போலீசார் ஏன் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்றும் அந்த சாவியால்  திறக்க முடியாது உடைத்து உள்ளே செல்கிறோம் என்றும் விஷால் வாக்குவாதம் செய்தார். 


இதனையடுத்து வாக்குவாதம் அதிகரித்தால் போலீசார் விஷால்  மற்றும் மன்சூர் அலிகானை கைது செய்தனர். நாளை பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.