திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவ் சல்மான். இவர் சென்னை  தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பிய சல்மான், தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை தொடர்ந்து சக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார். சல்மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவர் தூக்கிட்ட அறையை ஆய்வு செய்த போலீஸாரின் கையில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.


அந்த கடிதத்தில் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் எனவும் தான் சேர்த்து வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது தாயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் எழுதிவைத்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சல்மானின் தற்கொலை முடிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை விசாரித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | ஒருநாள், டி20 போட்டிகளில் முதல் இடத்தை பிடித்த பாகிஸ்தான் வீரர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe