சென்னை மெட்ரோ ரயில்களில் விரைவில் இலவச வைபை நெட் வொர்க் வசதி மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அவர்களை கவருவதற்காக பல்வேறு சிறப்பு வசதிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.


அந்தவகையில் தற்போது ஓடும் மெட்ரோ ரயிலில் இலவச வைபை நெட்வொர்க் வசதியை வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது.  இதற்கான மெட்ரோ ‘ஆப்’ பதிவை ‘ஸ்மார்ட்’ போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் மெட்ரோ ரயில்களில் விரைவில் வழித்தட வரை படமும் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய வரைபடம் அடுத்தடுத்த ரயில் நிலையங்களுக்கு ஏற்ப மாறும் வகையில் டிஜிட்டல் முறையில் அனுமதிக்கப்படுகிறது. 


இந்த டிஜிட்டல் வரைபடம் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.இதில் வர்த்தக விளம்பரமும் இடம்பெறச் செய்து மெட்ரோ ரயிலின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.