இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


மேலும் படிக்க | மணமகனுக்கு வந்த சோதனை, மேடையில் அவிழ்ந்துவிழுந்த பேண்ட்: வைரல் வீடியோ


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் யானைகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. 


தற்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல குன்னூர் மற்றும் கோத்தகிரி என்ற இரண்டு மலைப்பாதைகள் உள்ளன. இந்த இரு சாலைகளும் அடர்ந்த வனத்தின் நடுவே உள்ளதால் இந்த சாலையின் ஓரத்தில் வன உயிரினங்கள் நடமாட்டம் இருக்கும்.


இந்த நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை என்ற இடத்தில் சுற்றுலா வாகனத்தை காட்டுயானை ஒன்று வழிமறித்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று குஞ்சப்பனை அருகே சென்ற போது சாலையின் ஓரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நின்று கொண்டு இருந்துள்ளது.