தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.  அதனைத் தொடர்ந்து வருகின்ற 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடக்கு தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 9 மற்றும் 10ம் தேதிகளிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 10,11,12 தேதிகளிலும்,  தமிழக கடற்கரை பகுதிகள் அதனையொட்டி உள்ள ஆந்திர கடற்கரைப் பகுதிகளில்  11,12 தேதிகளிலும் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர  கடலோர மாவட்டங்களில் நவம்பர்  
11, 12 தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.  மீனவர்கள் நவம்பர் 9, 10 தேதிகளில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும், நவம்பர் 10 முதல் 12 வரை தென் மேற்கு வங்ககடல் தமிழக கடற்கரை பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 


ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் நவம்பர் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது.


ALSO READ தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR