சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் விஜய் என்பவரும் மஞ்சு என்ற பெண்ணும் ஏற்காடு சுற்றுலா வந்துள்ளார். ஏற்காட்டிற்கு வந்தவர்கள் தனியார் தங்கும் விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து நேற்று இரவு தங்கி உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருவரும் தங்கியிருந்த நிலையில் விடுதியில் நள்ளிரவு நேரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே தகவல் அடிப்படையில் விரைந்து வந்த ஏற்காடு காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 


விசாரணையில், விஜயும் உடன் தங்கியிருந்த பெண் அவருக்கு அண்ணி உறவுமுறை என்பது தெரியவந்தது. தனது அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக விஜய் அண்ணியுடன் ஏற்காட்டுக்கு வந்து தனி அறை எடுத்து தங்கி உள்ளனர். விஜய் இரவு மது அருந்திவிட்டு, தனக்கு வரும் 23 ஆம் தேதி திருமணம் நடக்கப் போவதாகவும் திருமணத்திற்கு பின்னர் தங்களது நட்பை தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 


இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரே படுக்கையில் தூங்கியுள்ளனர்.


ALSO READ | ஐந்து வயது பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 10 வயது சிறுவர்கள்


 திடீரென இரவு மூன்று மணியளவில் விஜய் கண்விழித்து பார்க்கும்போது மஞ்சுவை காணவில்லை. அதிர்ந்து போன விஜய் தேடுகையில் கழிவறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க மஞ்சு கழிவறைக்கு சென்று இருக்கலாம் என எண்ணியிருக்கிறார். வெகுநேரமாகியும் மஞ்சு வராததால் கழிவறையை உடைத்து பார்க்கையில் மஞ்சு நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.



இதை தொடர்ந்து விஜய் மஞ்சுவை தூக்கிவந்து படுக்கையில் கிடத்தி துணிகளை போட்டுவிட்டு பார்க்கும்போது அவரிடம் இறந்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் விசாரணையில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகனான 30 வயதான விஜய் மற்றும் பிரபு ஆகியோர் அண்ணன் தம்பிகள் என்பது தெரிய வந்தது. அண்ணன் பிரபு கடந்த 2017 ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அப்போது அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருந்துள்ளனர். 


பிரபுவுக்கும் மஞ்சுவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்காக பிரபு வெளிநாடு சென்றுள்ளார். அப்போது இருந்த தனிமை காரணமாக அண்ணி மஞ்சுவுக்கும் விஜய்க்கும் நட்பு மலர்ந்தது. அண்ணன் ஊரில் இல்லாததால் நட்பு தொடர அது காதலாக மாறியது. 


இவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமானதால் இருவரும் உல்லாசமாக இருக்க அடிக்கடி ஏற்காடு வருவது வாடிக்கையானது. கோரோனா காரணமாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய பிரபு தனது மனைவியுடன் கச்சராபாளையம் என்ற பகுதியில் தனிக்குடித்தனம் சென்று விவசாயம் செய்து வருகிறார். 


இந்நிலையில் விஜய்க்கு திருமணம் என்ற செய்தி கேட்டதும் மஞ்சு தாம் எங்கே செல்வது என கேட்க இருவருக்குள் நேற்றிரவு வாக்குவாதம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மஞ்சு தூக்கிட்டு தற்கொலை (Suicide) செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


இதைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் கொண்டு சோதனை மேற்கொண்டு டிஎஸ்பி தையல்நாயகி தலைமையில் போலீசார் (TN Police) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


ALSO READ | கத்தியை காட்டி துணிகர கொள்ளை: 75 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்துடன் தப்பித்த கும்பல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR