IPL 2018 தொடரின் 11-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 197 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


இதையடுத்து, 198 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களே எடுக்க முடிந்தது. 


இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றியை பெற்றது. 


பஞ்சாப் அணியின் தரப்பில் ஆன்ட்ரூ டை 2 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றிருந்தனர். 


இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ஈடன் கார்டென்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது.