சென்னை: அதிமுக MP நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு விஷம் மற்றும் தூக்கு கயிறு வழங்கி டிடிவி ஆதரவாளர் புகழேந்தி நூதனப போராட்டம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பலதர போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கூறி தமிழக அரசியல் கட்சியினர் தங்கள் தரப்பிலும் போராட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.


கடந்த மார்ச் 28-ஆம் நாள் காவிரி விவகாரம் தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக MP-க்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அதிமுக MP நவநீத கிருஷ்ணன் ஆவேசமாக தெரிவித்தார்.



இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாளர் புகழேந்தி அவர்கள் தெரிவிக்கையில், மாநிலங்களவையில் நவநீத கிருஷ்ணன் தற்கொலை செய்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை அவர் அதனை செய்யவில்லை எனவே, அவருடைய வாக்குறுதியை அவருக்கு நினைவூட்டும் வகையில் அவருக்கு தான் விஷம் மற்றும் தூக்கு கயிறினை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


முன்னதாக கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனுக்கு எலி மருந்து அனுப்பி நூதன போராட்டத்தை துவங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது!