World Bizarre News: எப்போதும் சைவம் சாப்பிடுவோருக்கும், அசைவம் சாப்பிடுவோருக்கும் இடையில் சிறு சிறு பிணக்கு இருப்பதை நாம் அனைவருமே அறிந்திருப்போம். இப்போது Vegan போன்ற கலாச்சாரங்கள் சைவ விரும்பிகளையே அலறவைக்கும் வகையில் வளர்ந்து வருகிறது எனலாம். அசைவம் சாப்பிடுவோரிலும் பெரும்பாலும் பல பிரிவுகள் இருக்கும். சிலர் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள், சிலர் மாட்டுக்கறியை தவிர்த்து பிற உணவுகளை சாப்பிடுவார்கள், ஒரு சிலரோ பன்றி கறியை சாப்பிட யோசிப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இங்கு பெண் ஒருவர் ரத்தத்தை அப்படியே குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். ஆம், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசிக்கும் மிச்செல் என்ற 40 வயது பெண்மணி, தினமும் ஒரு லிட்டர் ரத்தத்தை குடிப்பார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 2013ஆம் ஆண்டிலேயே பொதுவெளியில் தெரிவித்துள்ளார். அதிலும் சில மிருகங்களின் ரத்தத்தைதான் குடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


3,800 லிட்டர் ரத்தம்


ரத்தத்தை குடிப்பது குறித்து அந்த பெண்மணி கூறுகையில், அது பெரும்பாலும் வைன் குடிப்பது போன்றே இருக்கும் என்றே தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அவர் 3,800 லிட்டர் ரத்தத்தை குடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். தினமும் அவர் ரத்தத்தை குடிப்பதன் மூலம் எப்போதும் தெம்பாகவே உணர்வதாக தெரிவித்துள்ளார். அவர் ரத்தத்தை கிளாஸில் ஊற்றி நேரடியாகவும், தனது உணவில் கலந்தும் எடுத்துக்கொள்வார் என தெரிவித்தார். காலையில் குடிக்கும் காப்பியுடனும் அவர் ரத்தத்தை கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


மேலும் படிக்க | அதிகரிக்கும் Incest உறவு... அமெரிக்காவில் அதிகரிக்கும் ஆபத்துகள் - இதில் என்ன பிரச்னை?


மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,"எனக்கு தண்ணீரை போல் ரத்தமும் ரொம்ப முக்கியம். புத்தகம் படிக்கும்போதும், தொலைக்காட்சி பார்க்கும்போதும், ஓவியம் வரையும்போதும், ரிலாஸாக இருக்கும்போது ரத்தத்தை குடிக்கும் வழக்கம் இருக்கிறது. எனக்கு அதனை குடிப்பதால் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.


மனித ரத்தமே...


அவர் மிருகங்களின் ரத்தத்தைதான் அதிகம் குடிப்பவராக இருந்தாலும், மனித ரத்தம் ருசியானது எனவும் தெரிவித்துள்ளார். "மிருகங்களின் ரத்தத்தை விட மனிதர்களின் ரத்தத்தைதான் நான் விரும்புவேன். அமெரிக்காவில் விதிமுறைகள் கடுமையாகவிட்டது. மனித ரத்தம் எளிமையாக கிடைப்பதில்லை, மேலும், அதை குடிப்பதும் சற்று கடினம்தான். ஆனால், நான் ரத்த காட்டேரி இல்லை. எனக்கு ரத்தம் குடிக்க பிடிக்கும் அவ்வளவுதான்" என்றார். 


மேலும், இந்த பழக்கம் எங்கு தொடங்கியது என்பது குறித்தும் அவர் விளக்கி உள்ளார். மிச்செலின் பதின்ம வயதில் ஏற்பட்ட சில மனநிலை பிரச்னைகளால் அவர் தன்னை உடல் ரீதியாகவும் வருத்திக்கொண்டுள்ளார். அந்த சமயத்தில்தான் அவருக்கு இந்த ரத்தம் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். 


இந்த பழக்கம் எப்படி வந்தது?


அதாவது, அவரது 18 வயதில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அத்தகைய மனநிலையில் அவர் தனது கையை அறுத்துள்ளார். அப்போது அவரது கையில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. அப்போது அந்த ரத்தத்தை வாயில் வைத்து ருசி பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அந்த ருசி மிகவும் பிடித்திருந்திருக்கிறது. அன்றிலிருந்து இந்த பழக்கத்தை அவர் தொடர்ந்து வைத்துளளார். 


"ரத்தம் என் தொண்டையில் இறங்கும்போது, சளி பிடித்து சூடான பானத்தை குடிப்பது போன்ற உணர்வு இருக்கும். எனக்கு ரத்தம் கிடைக்கவில்லை என்றால் எரிச்சலும் கோபமும் வருகிறது. எனது வீட்டை விட்டு வெளியே போக மனம் வராது. எனக்கு ரத்தம் எப்போதும் வேண்டும்" என்றார்.


மேலும் படிக்க | உடலுறவு... அதுவும் மாணவியுடன் உணவக கழிவறையில் - பெண் ஆசிரியருக்கு வாழ்நாள் தடை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ