Turkey-Syria Earthquake: மூன்று நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாக தெரியவந்துள்ளது. கடுங்குளிரால் மீட்புப் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ள நிலையில், உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் கண்டறிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லட்சக்கணக்கான மக்கள், குளிர் மற்றும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கியின் ஹடேயில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 2 வயது சிறுவனை 79 மணி நேரத்திற்குப் பிறகு மீட்டது, சோர்வடைந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்படாதவர்கள் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை மங்கி வருகிறது.


சிரியாவில் , ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சிரியா அகதிகளின் நிலைமை  நிலநடுக்கத்திற்கு பிறகு மேலும் மோசமாகிவிட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சிரியாவின் வடக்குப் பகுதிகளில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். துருக்கியில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | துருக்கி சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை  அதிகரிப்பு! உதவிக்கு விரைந்த இந்தியா


மீட்புப்பணி


லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேரழிவுகள் மற்றும் சுகாதார பேராசிரியரான இலன் கெல்மன் என்பவர் நிலநடுக்கத்தின் பாதிப்பைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: "பொதுவாக, பூகம்பங்கள் மக்களைக் கொல்வதில்லை, நாம் செயற்கையாக உருவாக்கியிருக்கும் கட்டமைப்புகள் தகர்ந்தும் இடிந்தும் போவதாலேயே அதிக பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்படுகிறது"  


நிலநடுக்கத்தில் இருந்து மீட்புப் பதில்கள் குறித்த ஆராய்ச்சியை வெளியிட்ட கெல்மேன், இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதுதான் மிக முக்கியமான காரணி என்று கூறினார். "அவர்களின் உடல்கள் செயலிழக்கும்" அல்லது அவர்கள் இரத்தம் முற்றிலுமாக வெளியேறுவதற்கு முன் அவர்களுக்கு உதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க | நெஞ்சை உலுக்கும் வீடியோ: துருக்கி நிலநடுக்கம் - 22 மணிநேர போராட்டம்... பெண் மீட்பு


 ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், வடமேற்கு சிரியாவுக்கு கூடுதல் உதவிகளை அணுக, துருக்கி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஒன்றுக்கும் மேற்பட்ட எல்லைக் கடவுகள் மூலம் ஐ.நா உதவியை வழங்க அனுமதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் இருந்து குட்டெரெஸ் அனுமதி கோரினார்.  


"ஐநாவைத் தவிர வேறு பல நிவாரண முகமை நிறுவனங்கள் ஏற்கனவே பிற எல்லை கடப்புகள் மூலம் உதவிகளை வழங்குகின்றன. ஐ.நா. தொடர்பாக, முடிந்தவரை பல எல்லைக்கடப்புகள் மூலமாக நிலநடுக்கத்தால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்று குட்டெரெஸ் தெரிவித்தார்.


இடிபாடுகளுக்கு அடியில் மாட்டிக்கொண்டவர்கள்


இடிபாடுகளுக்கு அடியில் மாட்டிக்கொண்டவர்கள், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புக்ள் குறிந்துவரும் நிலையில், இனிமேல் இடிபாடுகலில் இருந்து மீட்கப்படுபவர்கள் உயிர் பிழைபப்தற்கான வாய்ப்பு குறைந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.


மேலும் படிக்க | Turkey Death Toll: கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை! துருக்கி & சிரியாவில் மக்களின் நிலை திண்டாட்டம்


துருக்கி மற்றும் சிரியாவில் தொடர் பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.


இந்தியா 6 டன் அவசரகால நிவாரண உதவிகளை சிரியாவுக்கு அனுப்பியுள்ளது


இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம்அவசரகால நிவாரண உதவிகளை சிரியாவுக்கு அனுப்பிய இந்தியாவைப் போன்றே பல நாடுகளும் பல்வேறு உதவிகளை வழங்குகின்றன. கையடக்க ஈசிஜி இயந்திரங்கள், அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அவசரகால மருந்துகள் மற்றும் உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளது.


மேலும் படிக்க | Turkey Earthquake: அதிகரிக்கும் துருக்கி நிலநடுக்க சேதாரங்கள்! இதுவரை 15,383 பேர் பலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ