மியான்மரில்  (Mynamar) ஜனநாயகத்தை மீட்க இராணுவ ஆட்சிக்கு எதிராக  போராட்டங்கள் தொடர்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மியான்மரில்,  ஜனநாயகத்தை மீட்க போராட்டி வரும்  மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மேலும் இருவர் கொல்லப்பட்டனர். 


பிப்ரவரி 1 மியான்மரில்  நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் மேற்கொண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கையில்  குறைந்தது 550 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்காக செயல்படும் ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 46 குழந்தைகள் அடங்கும்  என்று மனித உரிமைகள் அமைப்பான  'அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம்' சனிக்கிழமை கூறியது. சுமார் 2,751 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. ஆனால் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி, அடக்குமுறையை கையாண்டு வருகிறது.


மியான்மரில் (Myanmar) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.


ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. 


பிப்ரவரி 1 ம் தேதி  ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி (Aung San Suu Kyi ) தலைமையிலான ஜனநாயகக் கட்சியை இராணுவம் பதிவியிலிருந்து அகற்றி, அவரையும் அவரது பல என்எல்டி கட்சி உறுப்பினர்களுடன் கைது செய்தது. 


ALSO READ | கலவர பூமியாகும் மியான்மார்; Aung San Suu Kyi கட்சி அதிகாரி போலீஸ் காவலில் மரணம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR