அம்பாந்தோட்டை: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் பயணக் கப்பல் அம்பாந்தோட்டை சென்றடைந்தது. சென்னையில் இருந்து இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் கப்பல் இலங்கையின் தெற்கு துறைமுக நகரமான அம்பாந்தோட்டையை இன்று (2023, ஜூன் 8, புதன்கிழமை) சென்றடைந்தது. இதன் மூலம், இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முதல் சர்வதேச பயணக் கப்பலை, மத்திய அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவால்  சென்னையில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


சென்னையில் 17.21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சர்வதேச குரூஸ் டெர்மினல், எம்வி எம்பிரெஸ், அந்தமான், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள சர்வதேச கப்பல் முனையங்கள் விரைவில் இந்தியாவின் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்தும்.


மேலும் படிக்க |  IND vs AUS: WTC 2023 இறுதி போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி?


இரு நாடுகளுக்கும் இடையில் கப்பல் சேவையை தொடங்க வேண்டும் என இந்திய அரசும் இலங்கை அரசும் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு உறுதியான வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 80,000 சுற்றுலாப் பயணிகள், அடுத்த நான்கு மாதங்களில் ஒவ்வொரு வாரமும் சென்னை-அம்பாந்தோட்டை-திருகோணமலை-சென்னை சேவையைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


MS எம்பிரஸ் 1600 பயணிகள் மற்றும் 600 பணியாளர்களுடன் பாதுகாப்பாக அம்பாதோட்டை சென்றடைந்துள்ளது. ஹெல்லாஸ் குழுமத்தின் போக்குவரத்து மற்றும் தளவாடப் பிரிவான அட்வாண்டிஸ் மற்றும் கார்டெலியா குரூஸ் ஆகியவை அட்வாண்டிஸ் - டிராவல் & ஏவியேஷன் இடையேயான கூட்டாண்மையின் ஒரு பகுதியாக பொது விற்பனை முகவராக செயல்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.


அதே நேரத்தில் அட்வாண்டிஸ் குழுமத்தின் துணை நிறுவனமான கிளாரியன், ஷிப்பிங் துறைமுகமாக செயல்படும். இது Cordelia குரூஸ்களுக்கான இலங்கையில் முகவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | SGFI: 66வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின! அசத்தும் மாணவர்கள்


சுற்றுலாத் துறை வளர்ச்சி
இதற்கான முன்முயற்சி இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக நடந்து வந்தது, அதற்கு இப்போது உறுதியான வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பகமான ஏஜென்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, அடுத்த நான்கு மாதங்களில் ஒவ்வொரு வாரமும் 80,000 சுற்றுலாப் பயணிகள், பெரும்பாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இந்தப் பயணத்தை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.


சென்னை-ஹம்பாந்தோட்டை-திருகோணமலை-சென்னை சேவை, இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் சேவை என்பது குறிப்பிடத்தக்கது. 2022 இல் நடந்த இன்க்ரெடிபிள் இந்தியா இன்டர்நேஷனல் க்ரூஸ் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கப்பல் சேவைக்காக சென்னை துறைமுகம் மற்றும் நீர்வழி விடுமுறை சுற்றுலா இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Pakistan: பொருளாதார சிக்கலின் உச்சம்! சொத்தை மூன்றாண்டு குத்தகைக்கு விட்ட பாகிஸ்தான்


முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நீண்டகால உறவு உள்ளது. இந்த கப்பல் மூலம், இலங்கைக்கு பயணம் செய்யலாம், இலங்கையின் வரலாறு பகவான் ஸ்ரீராமின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. இந்தப் பயணத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.


முன்பதிவு தளத்தில் இருந்து அதன் முழுமையான தகவலைப் பெறலாம். இந்த கப்பல் சேவையைப் பயன்படுத்த இந்தியர்கள் அதிகம் விரும்புவார்கள் என்று நம்புகிறார்கள்.


மேலும் படிக்க | WTC Final: அசுர ஆட்டம் ஆடிய ஆஸ்திரேலியா... அஸ்வின் இல்லாததால் இந்தியாவுக்கு ஆப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ