105 பயணிகள் மற்றும் 11 சிப்பந்திகளுடன் மியான்மர் ராணுவ விமானம் மாயமானது. இராணுவ விமானம் மாயமானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மியான்மரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானதாக அந்நாட்டின் ராணுவ தளபதி உறுதிப்படுத்தி உள்ளார். மியான்மரின் மையிக் மற்றும் யாங்கூன் இடையே இந்த விமானம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிற்பகல் 1.35 மணிக்கு விமானம் புறப்பட்டு 20 மைல்கள் தொலைவில் உள்ள தாவே நகருக்கு மேற்கே சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக ராணுவ அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாயமான விமானத்தை தேடும் பணியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.  இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.