சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் 5 வயது சிறுமி ஒருவர் கண் அரிப்பாலும் கண் எரிச்சலாலும் அவதி பட்டு வந்து உள்ளார். அவரது தயார் பலமுறை நீரில் கண்களை கழுவியும் அந்த எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கவில்லை இதனால் அவர் சிறுமியை கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிறுமியின் கண்ணை டாக்டர்கள் மைக்ரோஸ்கோபி கருவி மூலம் சோதனை செய்தனர் அப்போது சிறுமியின் கண் இமையில் பேன்கள் கூடு கட்டி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அதை டாக்டர்கள் நீக்கினர் அதில் 9 பேன்களும் 20 முட்டைகளும் இருந்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை சுகாதாரமாக இல்லாததால் இது ஏற்பட்டு உள்ளது. இதனால் கண் பார்வையே பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் என டாக்டர்கள் கூறினர்.