நாய் மனிதனைக் கடிக்கும் செய்தியைக் கேட்டால், நாம் ஆச்சரியப்பட மாட்ட்டோம்... ஏனெனில் இது மிகவும் பொதுவான சம்பவம். ஆனால் ஒரு மனிதனால் எப்போதாவது நாயைக் கடித்த சம்பவத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது நம்ப முடியாத விஷயமாக தோன்றலாம், ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் தான். சமீபத்தில் இது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இங்கு நபர் ஒருவர் போதையில் நாயை தாக்கியுள்ளார். அமெரிக்காவின் டெலவேர் மாநில காவல்துறை இப்படியொரு காட்சியை தங்கள் கண்களால் பார்த்தது அவர்களையே திகைக்க வைக்கும் அளவுக்கு இருந்தது. அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக ஒருவரைப் பிடிக்க விரும்பி துரத்தினார்கள். இதன் போது அந்த நபர் செய்த செயலை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த நபர் போலீஸ் நாயை ஒருமுறை அல்ல பலமுறை கடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காயமடைந்த நாய்


நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, ஜமால் விங் என்ற 47 வயது நபர் டெலவேர் மாநில காவல்துறையினரால் மிக வேகமாக வாகனம் ஓட்டியதற்காக பிடிபட்டார். அதன் பிறகு அவருக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது, ஆனால் அவர் கேட்கவில்லை. போலீஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த நபர் காவல் துறை வாகனத்திற்குள் செல்லாத நிலையில், நாயுடன் வந்த போலீஸார் அவரை வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர். இதற்கிடையில், ஜமால் விங்,  DSP K9 போலீஸ் நாயை பலமுறை கடித்து காயப்படுத்தினார்.


குடி போதையில் இருந்த நபர்


பின்னர் ஜமால் விங் மது அருந்தியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் சிகிச்சைக்காக அவசர மருத்துவ சேவையில் ஒப்படைக்கப்பட்டார். நாய்க்கும் காயம் ஏற்பட்டதால், நாய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குணமடைந்த பின்னர், குற்றம் சாட்டப்பட்ட நபர், பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் நாயை தாக்கியதாகவும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் $34,200 (₹280,892.64) அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 


மேலும் படிக்க | தினமும் மனைவிக்கு மயக்க மாத்திரை... 51 ஆண்களை அத்துமீற வைத்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்


தற்போது இது போன்ற வினோதமான, அதே சமயத்தில் கொடூரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கு பெரும்பாலும் குடி போதை அல்லது போதைப் பொருள் காரணமாக இருந்துள்ளது. அதில் சமீபத்தில் மெக்ஸிகோவில் நடந்த கொடூரமான குற்றச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்கு மனைவியைக் கொன்று அவரது சடலத்தை வைத்து கொடூரமான செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்டவன் பிசாசு வழிபாடு செய்பவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவன் தனது மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்டுள்ளான். 


மூளையை தின்ற பிறகும் அரக்கனின் மனம் திருப்தியடையாதபோது, ​​தன் மனைவியின் மண்டை ஓட்டை ஆஷ் ட்ரே ஆக்கி அதில் சிகரெட் சாம்பலை நிரப்ப பயன்படுத்தி வந்துள்ளான். குற்றம் சாட்டப்பட்டவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அல்வாரோ (32). அவர் ஜூலை 2 ஆம் தேதி பியூப்லாவில் உள்ள தம்பதியரின் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அல்வாரோ கொடூரமான குற்றத்தைச் செய்த போது போதைப்பொருள் வைத்திருந்தார். விசாரணையில்,  பிசாசின் கட்டளையால் அவ்வாறு செய்ததாக அல்வாரோ கூறினான். கொலைக்குப் பிறகு, அல்வாரோ தனது மனைவியின் உடலைத் துண்டு துண்டாக்கி பிளாஸ்டிக் பைகளில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது. சில பைகளை வீட்டின் பின்புறமுள்ள குழியில் புதைத்து விட்டு, சிலவற்றை வீட்டுக்குள் வைத்திருந்தார் என விசாரணை செய்த அதிகாரிகள் கூறினர். அதன் முழுமையான விபரங்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.


மேலும் படிக்க |  மனைவியின் மூளையை தின்று... மண்டை ஓட்டை ஆஷ்ட்ரேயாக பயன்படுத்திய மனித மிருகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ