தினமும் மனைவிக்கு மயக்க மாத்திரை... 51 ஆண்களை அத்துமீற வைத்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்

Bizarre Incident: 10 ஆண்டுகளாக தினமும் இரவில் மயக்கம் ஏற்படுத்தும் மாத்திரையை கொடுத்து, பல ஆண்களை அவர் மனைவி மீது பாலியல் பலாத்காரம் செய்ய சொல்லிய கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியைா ஏற்படுத்தியது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 22, 2023, 02:58 PM IST
  • போலீசார் மொத்தம் 92 பாலியல் வன்புணர்வு வழக்குகளை அடையாளம் கண்டுள்ளனர்.
  • அனைத்து பாலியல் வன்புணர்வு சம்பவத்தையும் கணவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
  • இந்த தம்பதிக்கு திருமணமாகி 50 ஆண்டுகளாகியுள்ளது.
தினமும் மனைவிக்கு மயக்க மாத்திரை... 51 ஆண்களை அத்துமீற வைத்த கணவர் - அதிர்ச்சி சம்பவம் title=

Bizarre Incident: பிரான்ஸ் நாட்டில், ஒரு நபர் தனது மனைவிக்கு தினமும் இரவில் தூக்கமாத்திரை போன்ற மருந்தை கொடுத்து, பின்னர் அவரை பாலியல் வன்புணர்வு செய்ய ஆண்களை அழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், அவரின் மனைவியுடன் இந்த அதிர்ச்சியூட்டும் நடைமுறை 10 ஆண்டுகளாக தொடர்ந்தது என கூறப்படுகிறது. 

51 கைது

இது குறித்த விசாரணையில், அதிகாரிகள் 92 பாலியல் வன்புணர்வு வழக்குகளை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் 26 மற்றும் 73 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 51 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதானவர்களில் தீயணைப்பு வீரர், லாரி டிரைவர், நகராட்சி கவுன்சிலர், வங்கியில் தகவல் தொழில்நுட்ப பணியாளர், சிறைக்காவலர், செவிலியர் மற்றும் பத்திரிகையாளர் ஆகியோரும் அடங்குவர். டொமினிக் பி என அடையாளம் காணப்பட்ட அந்த பிரெஞ்சு நபர், தனது மனைவியின் உணவில் லோராசெபம் என்ற மனக்கவலைக்கு எதிரான மருந்தைக் கலந்த பிறகு, இந்த சம்பவங்களை தொடர்ந்து நடத்தியதாகக் கூறப்படுகிறது.

வீடியோ பதிவுகள்

பின்னர் அவர் 'விருந்தினர்கள்' என்று அழைக்கப்படுபவர்களை பிரான்சின் மசானில் உள்ள அவர்களது வீட்டிற்கு அழைப்பார் என்றும் அவரது மனைவி தூங்கும் போது அவரை பாலியல் வன்புணர்வு செய்ய அவர் அவர்களை ஏவி உள்ளார். டொமினிக் அத்தனை பாலியல் வன்முறை சம்பவங்களையும் வீடியோவாக பதிவுசெய்து, அதனை பென்டிரைவில் "ABUSES" (பாலியல் துன்புறுத்தல்) என்ற ஃபோல்டரில் வைத்திருந்தார் என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இணையம் மூலம் தொடர்பு

2011ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டுக்கு இடையில் இத்தனை பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் நடந்ததாகவும், பெரும்பாலான ஆண்கள் பல முறை இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டொமினிக்கிற்கு, அவரது மனைவியுடன் திருமணமாகி 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. மேலும் இந்த ஜோடிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | அட்லாண்டிக் கடலில் காணாமல் போன Titanic நீர்மூழ்கி கப்பல்... இன்னும் சில மணி நேரங்கள் தான்...!

டொமினிக், ஒரு மோசமான இணையதள பக்கத்தின் மூலம் இந்த ஆண்களுடன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உறுப்பினர்கள் தங்கள் அறியாமலேயே பாலியல் செயல்களைச் செய்வதைப் பற்றி விவாதிக்கிறார்கள். இதற்கு சம்மதிக்காத அவர்களின் இணையர்களை பெரும்பாலும் போதைப்பொருள் கொடுத்து இதுபோன்ற சம்பவத்தை அரங்கேற்றுகின்றனர்.

சந்தேகம் வராத வகையில்...

போதையில் மயக்க நிலையில் இருக்கும் அவரது மனைவி விழித்து விட கூடாது என்பதற்காக, கடுமையான வாசனையைத் தவிர்க்கும் வகையில் புகையிலை மற்றும் வாசனை திரவியங்களுக்கு டொமினிக் தடை செய்துள்ளார். மேலும், வெப்பநிலை திடீரென மாறுவதைத் தவிர்க்க ஆண்கள் வெந்நீரில் கைகளைக் கழுவுமாறும், குளியலறையில் ஆடைகளை விட்டுச்செல்வதை தவிர்க்க சமையலறையில் ஆடைகளை கழட்டவும், அண்டை வீட்டாரின் சந்தேகத்தை தவிர்க்க பள்ளிக்கு அருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு இருட்டில் நடந்துவரவும் அவர் 'விருந்தினர்களுக்கு' கட்டளை இட்டார்.

கைதானவர்களில் சிலர் அவருடைய மனைவி சம்மதம் இல்லை என்று தங்களுக்குத் தெரியாது என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஒருவர் அதை பாலியல் வன்புணர்வு என்பதை ஏற்க மறுத்துள்ளார். டொமினிக் இந்த பாலியல் வன்புணர்வுகளை மேற்கொள்ள "வன்முறை அல்லது அச்சுறுத்தல்களை ஒருபோதும் பயன்படுத்தவில்லை" என்றும் கூறப்படுகிறது. 

விவாகரத்து

2020ஆம் ஆண்டில் டொமினிக், உடை மாற்றும் அறைகளில் பெண்களை ஒளிப்பதிவு செய்ய மறைக்கப்பட்ட கேமராவைப் பயன்படுத்தியதாக சந்தேகப்பட்டதையடுத்து, 2020ஆம் ஆண்டில் அவர் மீதான ஆரம்ப விசாரணையின் போது, கற்பழிப்பு வீடியோக்கள் இருப்பதாகக் கூறப்படும் வீடியோக்கள் காவல்துறையினருக்குத் தெரியவந்தது. அவரின் கணவர் பதிவுசெய்துள்ள இந்த வீடியோக்கள் பற்றி அந்தப் பெண்ணிடம் கூறப்பட்டபோது, ​​அவர் உடைந்து மன அழுத்தத்துடன் போராடினார். பின்னர் அந்த பெண் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க | மாயமான 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தேவாலயம்... திடீரென தோன்றிய வினோத சம்பவம்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News