Maari TV Serial: பெண்ணாக வந்த அம்மன்.. தவிடுபொடியான ஜாஸ்மின் சூழ்ச்சி! நடந்தது என்ன?

Maari TV Serial Episode: "எக்காரணம் கொண்டும் கோவில் கட்டும் வேலையை மட்டும் நிறுத்தாதீங்க" இனி நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாறி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Apr 28, 2023, 01:22 PM IST
Maari TV Serial: பெண்ணாக வந்த அம்மன்.. தவிடுபொடியான ஜாஸ்மின் சூழ்ச்சி! நடந்தது என்ன? title=

Tamil Serial Updates: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. ஜாஸ்மின் சூழ்ச்சி நிறைவேறுமா? மாரிக்கு உணவை ஊட்டி விடும் அம்மன் என இன்றைய எபிசோட்டில் பல திருப்பங்கள் அரங்கேற இருக்கிறது. மாரி சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

மாரி சீரியலின் இன்றைய எபிசோட்:
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெகதீஸ் வீட்டுக்கு வந்த ஊர் தலைவர் இனிமே எங்களால் கோவில் வேலைகளை செய்ய முடியாது, எங்க ஊர்ல உங்க குல தெய்வத்தை வைப்பதில் எங்க ஊர் சாமிக்கு விருப்பம் இல்லை போல, எங்க ஆளுங்களுக்கு கை, கால் விளங்காம போய்டுச்சு என சொல்ல சூர்யா அவங்களுக்கு தேவையான மருத்துவ செலவுகளை நானே கவனித்து கொள்கிறேன், ஆனால் கோவில் வேலைகளை நிறுத்த வேண்டாம் என சொல்ல ஊர் தலைவர் இனிமே எங்களால் வேலை செய்ய முடியாது, எங்க ஊர்லயும் கோவில் கட்ட விட மாட்டோம் என சொல்லி கிளம்ப ஜாஸ்மின் டீம் சந்தோசமடைய ஜெகதீஸ் குடும்பம் அதிர்ச்சி அடைகிறது. 

மாரிக்கு ஆறுதல் சொல்லும் அம்மன்:
ஹாசினி உட்பட எல்லாரும் மாரிக்கு ஆறுதல் சொல்கின்றனர். பிறகு மாரி ரூமில் வருத்தமாக உட்கார்ந்து இருக்க சூர்யாவும் ஆறுதல் சொல்கிறான். இருந்தாலும் மாரி சாப்பிடாமல் வருத்தமாகவே இருக்கிறாள். இந்த சமயத்தில் தேவி அம்மா மாரி முன்பு தோன்றி இதெல்லாம் சோதனைகள். இதையெல்லாம் தாண்டி நீ கோவில் கட்டுவ, முதலில் சாப்பிடு என மாரிக்கு ஊட்டி விட்டு அவளை சாப்பிட வைக்கிறார்.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

அடுத்ததாக தேவியம்மா மாடத்தி அம்மனை வேண்டி கொள்ளும் போது கோவில் கட்ட இருக்கும் இடத்தில் அம்மன் காட்சி அளிக்கிறார். அதோடு அங்கு ஒரு அம்மி, வேப்பிலை மற்றும் தண்ணீர் குடம் ஆகியவையும் தோன்றுகிறது. பிறகு சாதாரண பெண்மணியாக மாறும் அம்மன் அந்த வேப்பிலையை அரைத்து தண்ணீரில் கரைத்து ஊர் முழுக்க தெளிக்க உடம்பு முடியாமல் இருந்தவர்கள் அனைவரும் குணமாகின்றனர். 

அந்த ஊரில் ஒரு பெண்மணி அம்மனாக வந்துள்ள பெண்ணிடம் யார் நீ? என்னத்த தெளிச்சிட்டு வர என கேள்வி கேட்க கை, கால் வராமல் போனவர்கள் எல்லோரும் சரியாகி வெளியே வருகின்றனர். அடுத்து அந்த பெண் உங்களுக்கு ஒன்னும் ஆகாது, எக்காரணம் கொண்டும் கோவில் கட்டும் வேலையை மட்டும் நிறுத்தாதீங்க என சொல்ல அத சொல்ல நீ யாருமா என கேள்வி கேட்கின்றனர். 

மேலும் படிக்க: கோவில் பூஜையில் ஜாஸ்மின் செய்த சம்பவம்.. மாரிக்கு ஷாக்! இன்றைய எபிசோட் அப்டேட்

குழப்பதில் நிற்கும் ஜெகதீஸ் குடும்பம்:
இதனால் நான் யாருனா கேட்கறீங்க என அந்த பெண்மணி அம்மனாக மாற அனைவரும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். மறுநாள் காலையில் மாரி வருத்தமாக உட்கார்ந்திருக்க அப்போது ஊர் தலைவர், என்ஜினீயர் உட்பட எல்லோரும் வந்து கோவில் கட்டும் வேலையை பார்க்கலாம் என சொல்ல ஜெகதீஸ் குடும்பம் புரியாமல் நிற்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாறி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.

"மாரி" சீரியல் தொடரை எங்கு பார்ப்பது?
மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் பிரபலமாக சீரியல் "மாரி" டிவி தொடர் 2022 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் டிஜிட்டல் தளமான ZEE5 இல் ஒளிபரப்பப்படுகிறது.

மேலும் படிக்க: ’உலக அழகியே..!’ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் பேரழகி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News