அதிமுக நிர்வாகியின் வீட்டில் கையெறி குண்டுகள் - கைது செய்தது போலீஸ்

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக நிர்வாகியின் வீட்டில் கையெறி குண்டு தயாரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 5, 2022, 01:35 PM IST
  • அதிமுக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு
  • காவல் துறையினர் நடத்திய சோதனையில் உறுதியானது
  • அதனையடுத்து அதிமுக நிர்வாகியின் மகன் கைது செய்யப்பட்டார்
 அதிமுக நிர்வாகியின் வீட்டில் கையெறி குண்டுகள் - கைது செய்தது போலீஸ் title=

திருச்சி மாநகரம் அரியமங்கலம் திடீர்நகர் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்றி சேகர். முன்னாள் அதிமுக பகுதிச் செயலாளர். இவரது மனைவி கயல்விழி, மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தவர். இவர்களுக்கு முத்துக்குமார் என்ற மகன் இருக்கிறார் (வயது 21). முத்துக்குமார் தனது வீட்டிலேயே வெடிகுண்டுகள் தயாரிப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி, பொன்மலை உதவி ஆணையர் காமராஜ், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளர் எட்வர்ட் உள்ளிட்டோர் முத்துக்குமார் வீட்டை சோதனையிட்டனர்.

மேலும் அவர், பன்றி பண்ணை வைத்திருக்கும் குமரன் நகர் வீட்டிலும் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே 3 கிலோ எடை கொண்ட  இரண்டு பால்ரஸ் குண்டுகளை கைப்பற்றினர். அதுமட்டுமின்றி பட்டாசு வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.பரிசோதனைக்கு பின்னர் வெடிகுண்டுகள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் படிக்க | காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்த இளைஞர்! சிகிச்சை பலனளிக்குமா?

இந்த ஒரு கையெறி குண்டை வீசி, ஒருவரை கொலை செய்து விட முடியும் என்பதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெடிகுண்டுகளை தயாரித்த முத்துக்குமார் மீது அரியமங்கலம் காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான முத்துக்குமார் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் படிக்க | வயிற்றில் கத்திரிகோல் வைத்து தைத்த மருத்துவர்... 12 ஆண்டுகளுக்குப் பின் பெண்ணுக்கு கிடைத்த நீதி!

முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமாரின் வீட்டில் வெடிகுண்டுகள் வெடித்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவரது பன்றி பண்ணையில் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஊரெல்லாம் விக்குது மதுபானம், ஆனால் டெண்டரை காணோம் - பார் உரிமையாளர்கள் புலம்பல்

மேலும் படிக்க | கோவை 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம் - மேலும் இருவர் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News