காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்த இளைஞர்! சிகிச்சை பலனளிக்குமா?

Love Crime: காதலிக்க மறுத்த  பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 5, 2022, 11:05 AM IST
  • காதலியை கழுத்தறுத்து கொல்ல முயன்ற காதலன்
  • கழுத்தை அறுத்து விட்டு தற்கொலைக்கு முயற்சி
  • தமிழகத்தில் தொடரும் காதல் வன்முறைகள்
காதலிக்க மறுத்த  பெண்ணை கழுத்தை அறுத்த இளைஞர்! சிகிச்சை பலனளிக்குமா? title=

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்செந்தூர் நா.முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகள் வனசந்தியா, இவர் உடன்குடி அருகில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த பாண்டியன் மகன் கார்த்திக் என்ற 21 வயது இளைஞர் கனரக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். வனசந்தியாவும், கார்த்திக்கும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் வனசந்தியாவின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதனால் மகளை கண்டித்துள்ளார். இதையடுத்து, வனசந்தியா கார்த்திக்கிடம் கடந்த ஒரு மாதமாக பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், காதலி வனசந்தியாவை பார்க்க கார்த்திக், வனசந்தியாவின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த வனசந்தியாவிடம், தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு வனசந்தியா மறுப்பு தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | சிவகாசியில் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

அப்பா சொல்வதை கேட்டு நடக்க முடிவு செய்திருப்பதாகவும், தற்போது மாணவியாக இருக்கும் தனக்கு படிப்பு தான் முக்கியம் என்றும் வனசந்தியா தெரிவித்துள்ளார். காதலியின்  மனதை மாற்ற கார்த்திக் முயற்சித்துள்ளார். ஆனால், வனசந்தியா, தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். கார்த்திக்கிடம் பேசப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனசந்தியா கழுத்தை அறுத்துவிட்டு சென்றுவிட்டார். இதில் பலத்த காயமடைந்த வனசந்தியா வலி தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார். ரத்தம் சொட்ட வெளியே வந்து வலியால் துடித்த வனசந்தியாவை அக்கம் பக்கத்தினர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

இதற்கிடையே வீட்டுக்கு சென்ற கார்த்திக், ஆத்திரத்தில் தான் செய்த செயலை நினைத்து அச்சமடைந்திருக்கிறார். வீட்டில் உள்ள அறையை பூட்டிவிட்டு மின்விசிறியில் கயிற்றால் தூக்கு  போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக கார்த்திக்கை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | Student Death: விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News