கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள்: கூடுவாஞ்சேரி அருகே சோகம்

கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி மூன்று கல்லூரி  மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 2, 2024, 01:26 PM IST
  • கீரப்பாக்கத்தில் உள்ள கல் குவாரியில் குளிக்கச் சென்ற மாணவர்கள்.
  • ஐந்து மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது.
  • ஐவரின் மூவர் மூழ்கி மரணம்.
கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த 3 கல்லூரி  மாணவர்கள்: கூடுவாஞ்சேரி அருகே சோகம் title=

கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி மூன்று கல்லூரி  மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்படை கமாண்ட வீரர்கள் தற்போது தண்ணீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கத்தில் உள்ள கல் குவாரியில் நேற்று மாலை குளித்துள்ளனர். ஐந்து பேருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், இவர்களில் மூன்று பேர் கல் குவாரியில் உள்ளே மூழ்கியுள்ளனர்.

இவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக்சாரதி(20) தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் (19) தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய்சாரதி (19)  ஆகியோர் என தெரிய வந்துள்ளது. அவர்களுடன் வந்த மற்ற இரண்டு நண்பர்கள் காவல்துறையினர்க்கு தகவல் தெரியபடுத்தினர். காவல்துறையினர் தீயணைப்புதுறை வீரர்களுக்கு கொடுத்த தகவலை தொடர்ந்து மறைமலைநகர் தீயனைப்புதுறை வீரர்கள் கீரப்பாக்கம் கல் குவாரியில் மூழ்கிய மாணவர்கள் மீட்க சென்றனர். நேற்று இரவு நேரம் என்பதால் காலை மீட்பு பணிகளை துவங்க மீண்டும் மறைமலைநகருக்கு திரும்பினர்.

மேலும் படிக்க | காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!

இந்த நிலையில் இன்று காலை முதலே மீட்பு பணிகளை மறைமலைநகர் தீயணைப்புதுறை வீரர்கள் துவங்கினர். தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகின்றது. மாணவர்களை ரப்பர் படகு மூலம் தேடி வந்த நீலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய்சாரதி உடலை மீட்பு பணியினர் மீட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டு மாணவர்களின் சடலங்களை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தற்போதும் சென்னை மெரினா கடற்கரை  கமேண்டோ வீரர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோக சம்பவம் குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. குளிக்க சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த இந்த கொடூரம் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், அப்பகுதி மக்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் படிக்க | பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணை - ஜோதிமணி குற்றச்சாட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News